search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கை பறித்துக் கொண்டு தர மறுத்ததால்  கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    விஜேஸ்பாண்டியன்.


    பைக்கை பறித்துக் கொண்டு தர மறுத்ததால் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

    • கார் மீது மோட்டார் சைக்கிளில் மோதியதில் மாணவரை சரிமாரியாக தாக்கி பைக்கை பறித்துச்சென்றனர்.
    • மனஉளைச்சலில் இருந்த மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பெருமாள்மலையை சேர்ந்த ராஜகோபால்- அங்காளஈஸ்வரியின் மகன் விஜேஸ் பாண்டியன் (வயது17). திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

    தனது நண்பர் ஒருவர் இறந்து விடவே துக்கம் விசாரிப்பதற்காக கடந்த 19 - ஆம் தேதி கொடைக்கானல் வந்தார். பின்னர் அன்று இரவு சுமார் 9.30 மணி அளவில் தனது நண்பர்கள் சுபாஷ், தினேஷ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

    பெருமாள்மலை-பழனி பிரிவு அருகில் உள்ள ரேஷன் கடை ஓரமாக இருந்த மண்ணெண்ணெய் பேரல் மீது மோதி பின்னர் அருகில் நின்றிருந்த ஒரு கார் மீதும் மோதி தவறி கீழே விழுந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் சேர்ந்து 3 இளைஞர்களையும் தாக்கியுள்ளனர். மேலும் விஜேஸ்பாண்டியனின் மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு காரை சரிசெய்து கொடுத்து விட்டு பைக்கை வாங்கிச் செல்லுமாறு கூறி உள்ளனர்.

    மோட்டார் சைக்கிள் பறிபோனது மட்டுமின்றி உடலில் காயங்களும் ஏற்பட்டதால் மன உளைச்சலுடன் வீட்டுக்குச் சென்றார். பின்னர் தனது அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து விஜேஸ்பாண்டியனின் சகோதரர் விஷ்ணு பாண்டியன் தனது தம்பியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து விசாரணை செய்த கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் கீழ் பெருமாள் மலையைச் சேர்ந்த வினோத் (33), தங்கம் (39) ஆகிய 2 பேரையும் கைது செய்தார். இவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×