என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுரண்டை அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
- மைதீன் கான் நள்ளிரவு தான் வீட்டுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
- வீராணத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் மைதீன்கான் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்:
சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூரை அடுத்த வீராணம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன். இவரது மகன் மைதீன்கான்
(வயது 21). இவர் சுரண்டையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
தற்கொலை
தினமும் கல்லூரிக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்துவிடும் மைதீன் கான், அதன்பின்னர் நண்பர் களுடன் சேர்ந்து வெளியில் சென்று விடுவதாகவும், நள்ளிரவு நேரத்தில் தான் தினமும் வீட்டுக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மைதீன்கான், வீராணத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த வி.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் தொங்கி கொண்டிருந்த மைதீன்கான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்