search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சமத்துவ பொங்கல் கொண்டாடிய கலெக்டர்
    X

    சமத்துவ பொங்கல் கொண்டாடிய கலெக்டர்

    • சமத்துவ பொங்கல் விழா இன்று சமத்துவபுரத்தில் நடைபெற்றது.
    • பொங்கல் பானையில் பச்சரிசியிட்டு பொங்கல் வைக்கும் விழாவை தொடங்கினர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாளையம் புதூர் ஊராட்சி வெள்ளக்கல் பகுதி சமத்துவபுரத்தில் பொங்கல் விழா கலெக்டர் சாந்தி தலைமையில் கொண்டாடுவதற்காக சமத்துவ பொங்கல் விழா இன்று சமத்துவபுரத்தில் நடைபெற்றது.

    முன்னதாக நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவுரி, ஷகிலா ஆகியோர் பொங்கல் பானையில் பச்சரிசியிட்டு பொங்கல் வைக்கும் விழாவை தொடங்கினர்.

    அதனை தொடர்ந்து பொங்கல் விழாவில் தருமபுரி கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு சமத்துவபுரத்தில் உள்ள மக்களோடு கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

    மேலும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான கோலப்போட்டி, லெமன் ஸ்பூன் மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

    சமத்துவ பொங்கல் விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், அரசு அலுவலர்கள்,ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×