search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்ட ஊராட்சிகளில் தலைவரை தவிர வேறு யாரும் கொடியேற்ற கூடாது கலெக்டர் உத்தரவு
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்ட ஊராட்சிகளில் தலைவரை தவிர வேறு யாரும் கொடியேற்ற கூடாது கலெக்டர் உத்தரவு

    • அனைத்து வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங் களிலும் இன்று முதல் 15-ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்றி வைத்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
    • ஊராட்சிமன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தேனி:

    மத்திய, மாநில அரசுகள் இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் இன்று முதல் 15-ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்றி வைத்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் சுதந்திர தினத்தன்று தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அனைத்து ஊராட்சிமன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் தேசிய கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊராட்சிகளில் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் உதவி இயக்குநரிடம் (ஊராட்சிகள்), புகார் தெரிவிக்கலாம். தேசிய கொடியை அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×