என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
- மாவட்ட கலெக்டர் சாந்தி அமரித் சரோவர் திட்டத்தினை பார்வையிட்டு அதன் சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்று நடவினையும் ஆய்வு செய்தார்.
- சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதிகளும் நிலமற்றோர்க்கு இடுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் செக்கோடி மற்றும் பூகானஅள்ளி கிராமங்களின் நீர்வடிப்பகுதிகளில் அமரித் சரோவர், கசிவு நீர்குட்டைகள், பெரியதடுப்பணை, தானிய உலர்களம் அமைத்தல் மற்றும் விவசாயிகளுக்கு மின்விசைத்தெளிப்பான் விநியோகம் ஆகிய திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மாவட்ட கலெக்டர் சாந்தி அமரித் சரோவர் திட்டத்தினை பார்வையிட்டு அதன் சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்று நடவினையும் ஆய்வு செய்தார். தானியக்களத்தினை ஆய்வு மேற்கொண்டு அதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலும், மாவட்ட கலெக்டர் பெரிய தடுப்பணைகள், கசிவு நீர்குட்டைகள் ஆய்வு மேற்கொண்டதுடன் ஒரு விவசாயிக்கு மின்விசைத்தெளிப்பான் வழங்கினார்.
இயற்கை வள மேம்பாட்டுப்பணிகளில் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக கசிவுநீர்குட்டைகள், பெரிய தடுப்பணைகள், ஏரி தூர்வாருதல், கிராம குட்டைகள், Recharge Shaft மற்றும் நீர் அமிழ்வுக்குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பாலக்கோடு வட்டாரத்தில் 5405 எக்டர் பரப்பளவில் 7 கிராமங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப்பணிகள் 5 ஆண்டு திட்டப்பணிகளாக 2021-2022 நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டப்பணிகளில் விவசாயிகள் சுய உதவி குழுக்கள் மற்றும் பயனாளி குழுக்களுக்கு பயிற்சியும், வேளாண்மை உற்பத்தி திட்டப் பணிகளில் இடுப்பொருட்கள் விநியோகம் மற்றும் செயல் விளக்கங்கள் அமைக்கப்படுகின்றன. சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதிகளும் நிலமற்றோர்க்கு இடுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன.
இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, வேளாண்மை துணை இயக்குநர் ஜெகதீசன், வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராணி, உதவி பொறியாளர் பத்மாவதி, நீர்வடிப்பகுதி பொறியாளர் வேலவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்