search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளை அருகே  ஊராட்சி ஒன்றிய பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டும் பணி- கலெக்டர் ஆய்வு
    X

    கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    திசையன்விளை அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டும் பணி- கலெக்டர் ஆய்வு

    • கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பின்னர் அங்குள்ள சத்துணவுகூடம், மாணவர் வருகை பதிவேட்டை பார்வையிட்டார்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் முதல்-அமைச்சர் சிறப்பு நிதி மூலம் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்பு அங்குள்ள சத்துணவுகூடம், மாணவர் வருகை பதிவேட்டை பார்வையிட்டார். மாநில அளவில் நடந்த சிலம்பு போட்டியில் முதலிடம் பிடித்த 8-ம் வகுப்பு மாணவர் முத்து சுரேஷ்சை பாராட்டினார். அப்போது அவருடன் குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ், துணைத்தலைவர் அனிஷா பயாஸ், ராதாபுரம் யூனியன் ஆணையாளர்கள் பிளாரன்ஸ் விமலா, ராஜேந்திரன் உள்பட பலர் உள்ளனர்.

    Next Story
    ×