search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்ட பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு
    X

    சிமிண்ட் சாலை அமைக்கும் பணியினை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி மாவட்ட பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு

    • தமிழ்நாடு அரசு நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வடிகாலுடன் கூடிய சிமிண்ட்சாலை அமைக்கும் பணி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் அறிவுசார்மையம் கட்டுமானப்பணி களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட ஆதிப்புரம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமிண்ட் சாலை அமைக்கும் பணி , பாலாஜி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலுடன் கூடிய சிமிண்ட் சாலை அமைக்கும் பணி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார்மையம் கட்டுமானப்பணி என மொத்தம் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்அடிப்படையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் படித்து பயன்பெறும் வகையில் அறிவுசார்மையங்கள் கட்டுதல், உள்ளூரிலேயே வணிகம் செய்யும் பொருட்டு விவசாயிகளுக்கு சந்தைகள் அமைத்தல் , சாலைவசதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்று அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜாராம், மன்றத்தலைவர்கள் கவியரசு, மிதுன்சக்கர வர்த்தி, செயல்அலுவலர் விஜயலட்சுமி உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×