search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் நகராட்சியில் தூய்மை திட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    தூய்மை பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்.

    கூடலூர் நகராட்சியில் தூய்மை திட்ட விழிப்புணர்வு முகாம்

    • காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் தூய்மை திட்ட பணிகளுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • கழிப்பறை வளாகங்களில் உள்ள சுவர்களில் வர்ணம் பூசி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது.

    கூடலூர்:

    கூடலூர் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கூடலூர் நகராட்சி 10-வது வார்டு காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் தூய்மை திட்ட பணிகளுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையாளர் காஞ்சனா, மேலாளர் ஜெயந்தி ,சுகாதார ஆய்வாளர் விவேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

    நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணிக்கான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு அங்குள்ள கழிப்பறை வளாகங்களில் உள்ள சுவர்களில் வர்ணம் பூசி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது. பின் அருகில் உள்ள ஆலமரம் பகுதி, காக்கைக்கு அன்னம் இடும் பகுதிகளில் குப்பைக்கழிவுகளை அகற்றி தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    Next Story
    ×