search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை
    X

    மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்திய துப்புரவு தொழிலாளர்கள்.

    மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை

    • ஓய்வூதிய பலன்களை வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
    • தங்கள் கோரிக்கை மனுவினை மாநகராட்சி அதிகாரியிடம் வழங்கிச்சென்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று அண்ணா துப்புரவு பணியாளர் சங்கத்தை சேர்ந்த தலைவர் பெருமாள் தலைமையில் செயலாளர் நாகராஜன் முன்னிலையில் 15-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தெரிவிக்கையில், ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்கவேண்டும். காலமான துப்புரவு பணியாளர்களின் பணப்பயன்களை அவர்களுடைய வாரிசுகளுக்கு ஒரே செட்டில்மெண்டாக வழங்கவேண்டும். நிரந்தர துப்புரவு பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு 8 மணிநேர வேலை என்பதை உறுதி செய்யவேண்டும்.

    தனியாரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மைப்பணி மேற்கொள்ளும் தொழிலாளர்களை தொகுப்பூதிய அடிப்படையிலும், சுயஉதவிக்குழுக்கள் மூலமாக மாநகராட்சி நேரடி பார்வையில் பணிகளை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து தங்கள் கோரிக்கை மனுவினை மாநகராட்சி அதிகாரியிடம் வழங்கிச்சென்றனர்.

    Next Story
    ×