search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் குப்பைகளை கொட்டாமல் இருக்க  கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய தூய்மை பணியாளர்கள்
    X

    தென்காசியில் குப்பைகளை கொட்டாமல் இருக்க கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய தூய்மை பணியாளர்கள்

    • பஜார் பூக்கடை சந்திப்பு பகுதி குப்பைகள் கொட்டப்பட்டு குப்பைமேடாக காட்சியளித்தது.
    • விழிப்புணர்வு ஏற்படுத்திய தூய்மை பணியாளர்களை வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டி செல்கின்றனர்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான பஜார் பூக்கடை சந்திப்பு பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வீடுகளில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் சாலையோரங்களில் கொட்டப்பட்டு குப்பைமேடாக காட்சியளித்து வந்தது. அதை அகற்றிவிட்டு தூய்மையே சேவை, இங்கு குப்பை கொட்டாதீர் என்ற வாசகத்துடன் தூய்மைப்படுத்தி கோலம் போட்டு நகராட்சி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். இதனை அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வித்தியாசமாக உள்ளது எனவும் தூய்மை பணியாளர்களை வெகுவாக பாராட்டியும் செல்கின்றனர். எனினும் அருகில் இருக்கும் வியாபாரிகள், வீடுகளை சேர்ந்தவர்கள் அங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×