search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன் விரோதம் காரணமாக இரண்டு தரப்பினர் மோதல்: நான்கு பேர் கைது
    X

    கைது செய்யப்பட்டவர்கள்

    முன் விரோதம் காரணமாக இரண்டு தரப்பினர் மோதல்: நான்கு பேர் கைது

    • மோதல் குறித்து இரு தரப்பினரும் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • தலைமறைவான நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர் சுகுமார். இவரது மகள் கௌசல்யாவுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், நேற்று இரவு இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்கி கொண்டார்களாம். மேலும், கௌசல்யாவை தாக்கி அவரது ஆடைகளை ஷர்மிளா குடும்பத்தினர் கிழித்து எறிந்தார்களாம்.

    இந்த சம்பவம் குறித்து கௌசல்யா மற்றும் ஷர்மிளா ஆகியோர் தனித்தனியாக ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். எனவே போலீசார் இரண்டு தரப்பைச் சேர்ந்த வெங்கடேசன்(வயது33), ஷர்மிளா(வயது29), நவீன், ஜெகதா, சுமதி, வெற்றிச்செல்வன்(வயது31), ஜெயா(வயது36), சரளா என மொத்தம் இரண்டு தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேசன், ஷர்மிளா, வெற்றிச்செல்வன், ஜெயா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவான நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    Next Story
    ×