search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல்- கத்தியால் குத்தப்பட்ட மாணவருக்கு சிகிச்சை
    X

    கத்தியால் குத்தப்பட்ட மாணவர் 

    களக்காடு அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல்- கத்தியால் குத்தப்பட்ட மாணவருக்கு சிகிச்சை

    • நோட்டு புத்தகத்தை மறைத்து வைத்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
    • பள்ளிக்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த பள்ளியில் நோட்டு புத்தகத்தை மறைத்து வைத்தது தொடர்பாக பிளஸ் டூ மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது இரு தரப்பு மோதலாக வெடித்துள்ளது. இதை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார்.

    மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவனிடம் பெற்றோரை அழைத்து வரும்படி அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்துள்ள அந்த மாணவன், இன்று பள்ளிக்கு கத்தியுடன் வந்ததுடன் மற்றொரு தரப்பு மாணவரின் முதுகில் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவன், களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.


    பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அந்த மாணவன் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து அறிந்த காவல்துறையினர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட கல்வி அதிகாரியும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளார். இந்த சம்பவம் களக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×