என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொளத்தூரில் பா.ம.க.-வாழ்வுரிமை கட்சியினர் திடீர் மோதல்-வாக்குவாதம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை படத்தில் காணலாம்.

    கொளத்தூரில் பா.ம.க.-வாழ்வுரிமை கட்சியினர் திடீர் மோதல்-வாக்குவாதம்

    • கொளத்தூர் அடுத்த காரைக்காடு பகுதியில் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்தில் மாநில நிர்வாகி முத்துலட்சுமி மற்றும் சிலர், பா.ம.க நிர்வா கிகள் குறித்து பேசியதற்கு அந்த பகுதியை சேர்ந்த பா.ம.க. தொண்டர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த காரைக்காடு பகுதியில் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநில நிறுவன தலைவர் வேல்முரு கன் பங்கேற்றார்.

    இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகி முத்துலட்சுமி மற்றும் சிலர், பா.ம.க நிர்வா கிகள் குறித்து பேசியதற்கு அந்த பகுதியை சேர்ந்த பா.ம.க. தொண்டர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனை கண்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் அவரை சூழ்ந்து வாக்குவாதம் செய்த னர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பா.ம.க. தொண்டரை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்.

    இதனை தொடர்ந்து கூட்டம் முடிந்த பிறகு தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகனை மாற்று பாதையில் போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

    இதனிடையே தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகிகள் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மேச்சேரி பஸ் நிலையத்தில் பா.ம.க. வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கோபால், ஒன்றிய செயலாளர் அக்னி சுதாகரன், வக்கீல் துரை ராஜ், உதயகுமார், மாதப்பன், ஒன்றிய தலை வர்கள் பகத்சிங், மணி, பழனிச்சாமி, ராமகிருஷ் ணன், மாவட்ட பொறுப்பா ளர்கள் செந்தில், கோபால் உட்பட ஏராளமான பா.ம.க. நிர்வாகிகளும், தொண்டர்க ளும் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×