search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்கும் சாக்கடை கழிவுகளால் பொதுமக்கள்அவதி
    X

    தேங்கும் சாக்கடை கழிவுகளால் பொதுமக்கள்அவதி

    • குடிதண்ணீர் பிடிக்கும் இடங்களிலும் கூட சாக்கடை தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
    • அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுங்கரஅள்ளி கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் சாக்கடை கழிவுகளால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    9-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள சாக்கடை கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாமலும், சீர் செய்யப்படாமலும் இருந்து வருவதால் அப்பகுதியில் குடிதண்ணீர் பிடிக்கும் இடங்களிலும் கூட சாக்கடை தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

    மேலும்இஅப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.து குறித்து முறையாக சீர் செய்ய வேண்டும் என பலமுறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    எனவே அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றை முறையாக சீர்செய்து அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர், மட்டும் ஊராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×