search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே சபை ஊழியர் மர்மச்சாவு
    X

    பால் இளங்கோ

    நாங்குநேரி அருகே சபை ஊழியர் மர்மச்சாவு

    • இளங்கோ களக்காடு அருகே புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக பணி புரிந்து வந்தார்.
    • அவர் நாங்குநேரி-களக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே அவர் படுகாயமடைந்த நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்தை சேர்ந்தவர் பால் இளங்கோ (வயது70). இவர் களக்காடு அருகே புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக பணி புரிந்து வந்தார். இன்று அதிகாலை அவர் அதிகாலை ஆராதனைக்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு, புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வராததால் சபை மக்கள் அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர்.

    அப்போது அவர் நாங்குநேரி-களக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே அவர் படுகாயமடைந்த நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    பால் இளங்கோ சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவருக்கு மேரி என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

    பால் இளங்கோவின் இறப்பு குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×