என் மலர்
உள்ளூர் செய்திகள்

சொக்கப்பனை தீயில் விழுந்து கருகிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
- மகன் வல்லரசு (வயது 18). இவர் கல்லூரிக்கு சென்று வந்த இவர், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.
- அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அந்த சொக்கப்பனை தீயை தாண்டி உள்ளனர். வல்லரசுவும் அந்த சொக்கப்பனை தீயை தாண்டியபோது, தவறி நெருப்புக்குள் விழுந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே வெள்ளாளபாளையம் பூலாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் எலையான். இவரது மகன் வல்லரசு (வயது 18). இவர் கல்லூரிக்கு சென்று வந்த இவர், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 6-ந் தேதி கார்த்திகை தீபத்தன்று, அப்பகுதியில் உள்ள கொங்காளம்மன் கோவிலில் சொக்கப்பனை தீ கொளுத்தி உள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அந்த சொக்கப்பனை தீயை தாண்டி உள்ளனர். வல்லரசுவும் அந்த சொக்கப்பனை தீயை தாண்டியபோது, தவறி நெருப்புக்குள் விழுந்தார்.
இதில் உடல் கருகிய வல்லரசுவை, அங்கிருந்த–வர்கள் மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்து–வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வல்லரசு உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.