search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை விடுமுறையில் குழந்தைகள்நீர் நிலைகளுக்கு செல்லாமல் இருக்க பெற்றோர் கண்காணிக்க வேண்டும்

    • நீர் நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியா மல் இறங்குவதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் மிகுந்த வருத்தமளிக்கிறது.
    • குழந்தை களுக்கு தக்க அறிவு ரைகள் வழங்கி உடனடியாக குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பள்ளி மற்றும் கல்லூரி கள் விடுமுறை காலம் என்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியா மல் இறங்குவதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் மிகுந்த வருத்தமளிக்கிறது.

    சேலம் மாவட்டத்தில் உள்ளநீர் நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியா மல் இறங்குவதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில், குழந்தைகள் இறங்காமல் கவனமுடனும், எச்சரிக்கை யுடனும், பாதுகாப்புடனும் இருப்பதை பெற்றோர் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர் தக்க அறிவுரை கள் வழங்க வேண்டும்.

    குழந்தைகள் நீர் நிலைக ளில் இறங்குவதையோ, குளிப்பதையோ கண்டால் பெரியோர், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் குழந்தை களுக்கு தக்க அறிவு ரைகள் வழங்கி உடனடியாக குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர் வினை சேலம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு கள் மற்றும் வருவாய்த்துறை யினர் ஆட்டோ மூலம் வீதி வீதியாக விழிப்புணர்வு களை ஏற்படுத்த உத்தர விடப்பட்டுள்ளது.

    குறிப்பாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமுடன் கண்கா ணித்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    கலெக்டர் அறிவுரையை தொடர்ந்து தாரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஒலி பெருக்கி மூலம் வரு வாய் துறையினர் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். அப்போது பெற்றோர்க ளுக்கு தங்களது குழந்தைகள் நீர் நிலைகளில் இரங்கமல் இருக்க கவனமுடன் இருக்க வலியுறுத்தவேண்டும்.

    மேலும் நீர் நிலைகளில் குழந்தைகள் குளிப்பதை பார்த்தால் பொதுமக்கள். பெரியவர்கள். அரசு அலுவ லர்கள் ஆகியோர் குழந்தை களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இதேபோல் மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில், மேட்டூர் வருவாய் ஆய்வா ளர் லீலா, கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் சிறுவர், சிறுமிகள் நீர் நிலைகளில் நீராட தன்னிச்சையாக செல்லவேண்டாம் எனவும், தங்கள் குழந்தைகளை கண்காணிப்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×