search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்திலேயே குழந்தை திருமணங்கள் நடப்பதில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடம்
    X

    கோப்பு படம்

    தமிழகத்திலேயே குழந்தை திருமணங்கள் நடப்பதில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடம்

    • திண்டுக்கல்லில் பாலியல் தொல்லையை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு பயிற்சியாளர் பெலிக்ஸ் ஜெயக்குமார் பேசுகையில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

    பாலியல் துன்புறுத்தல் தடை நிவர்த்தி சட்டம் 2013ன்படி அமைக்கப்பட வேண்டிய குழு குறித்து கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    அனைத்து ஒன்றியங்க ளிலும் 10 பேருக்கு அதிகமாக பணி செய்யும் இடங்களில் குழுக்களை அமைக்கவும், 10 பேருக்கு குறைவாக பணி செய்யும் இடங்களில் குழு பற்றிய விழிப்புணர்வு அளிக்கவும் பாலியல் ரீதியான புகார்களை பெற்று அதிகாரிகள் மூலம் மாவட்ட உள் குழுவுக்கு அனுப்புவது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.

    மேலும் ஊராட்சி ஒன்றியங்களில் இந்த விழிப்புணர்வை தீவிர படுத்தி பெண்களுக்கு எதி ரான பாலியல் தொந்தரவு களை தடுப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    Next Story
    ×