என் மலர்
உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த குழந்தை சாவு
- இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சாக்ரடீஸ் என்பவர் தர்ஷித்தை தூக்கி சென்றார்.
- கால்வாயை தாண்டும் போது எதிர்பாராத விதமாக சாக்கடைக்குள் இருவரும் தவறி விழுந்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள செல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கு 2 வயதில் தர்ஷித் என்கிற 2 வயது குழந்தை இருந்தன.
சம்பவத்தன்று தெருவில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சாக்ரடீஸ் என்பவர் தர்ஷித்தை தூக்கி சென்றார்.
அப்போது கால்வாயை தாண்டும் போது எதிர்பாராத விதமாக சாக்கடைக்குள் இருவரும் தவறி விழுந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு தர்ஷித்தை சிகிச்சைக்காக அரூர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






