search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதவரத்தில் 3-வது மாடியில் இருந்து விழுந்து குழந்தை பலி- தாய் கண்முன் பரிதாபம்
    X

    மாதவரத்தில் 3-வது மாடியில் இருந்து விழுந்து குழந்தை பலி- தாய் கண்முன் பரிதாபம்

    • மொட்டைமாடியின் தடுப்பு கைப்பிடி சுவரில் இருந்த இடைவெளிவழியாக 2-வது குழந்தை சியோன் வெளியே வந்தான்.
    • மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    மாதவரம் நேருநகர், பெருமாள் கோவில் தெருவில் உள்ள வீட்டின் 3-வது மாடியில் மேல் தளத்தில் வசித்து வருபவர் ராகுல். இவரது மனைவி பூஜா. இவர்களது மகன்கள் பருண், சியோன் (வயது2). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இங்கு வந்து தங்கினர்.

    இந்நிலையில் நேற்று மதியம் பூஜா வீட்டின் மாடியில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அவரது அருகே குழந்தைககள் பருண், சியோன் அகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மொட்டைமாடியின் தடுப்பு கைப்பிடி சுவரில் இருந்த இடைவெளிவழியாக 2-வது குழந்தை சியோன் வெளியே வந்தான். இதில் குழந்தை சியோன் 3-வது மாடியில் இருந்து தவறி கிழே விழுந்தான். இதனை கண்டு தாய் பூஜா அதிர்ச்சி அடைந்தார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தை சியோனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை சியோன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×