என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்

    • ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.
    • ஆக்கப்பணிகள் குறித்துதம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    ஓசூர்

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது. ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமிதியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். இதில், வருகிற 22 மற்றும் 23-ந் தேதி ஆகிய 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும், கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும், பிஎல்ஏ - 2, பிஎல்சி குறித்தும் மற்றும் கட்சி ஆக்கப்பணிகள் குறித்துதம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×