search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை 84 ரூபாயாக சரிவு
    X

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை 84 ரூபாயாக சரிவு

    • நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது.
    • முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 460 காசுகளாக நீடிக்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள நாமக்கல், ஈரோடு, பல்லடம், திருப்பூர் உள்பட பல பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையை கிலோவுக்கு 8 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 92 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை நேற்று 84 ரூபாயாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. தைப்பூசத்தையொட்டி கறிக்கோழியின் நுகர்வு குறைந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 4.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.

    முட்டை கோழி பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் முட்டை கோழி விலை மாற்றம் செய்யாமல் ஒரு கிலோ 79 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதே போல முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 460 காசுகளாக நீடிக்கிறது.

    Next Story
    ×