என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேரன்மகாதேவியில் நாளை மறுநாள் மின்தடை
    X

    சேரன்மகாதேவியில் நாளை மறுநாள் மின்தடை

    • சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • கேசவ சமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லிடைக்குறிச்சி கோட்டம் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதனால் இந்த துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. அதன் படி கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான் குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயக பேரி, மீனவன் குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான் குளம், வெங்கட்ரங்கபுரம், சிங் கிகுளம், தேவநல்லுர், காடு வெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்த மங்கலம், கேசவ சமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×