என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2015-ஐ விட தற்போது மழை அதிகம்: இன்று காலை முதல் மின்சாரம் படிப்படியாக சீராகும்- அமைச்சர் தகவல்
    X

    2015-ஐ விட தற்போது மழை அதிகம்: இன்று காலை முதல் மின்சாரம் படிப்படியாக சீராகும்- அமைச்சர் தகவல்

    • அனைத்து இடங்களிலும் முறிந்து கிடக்கும் மரங்கள் இன்று மாலைக்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 11 சுரங்கப்பாதைகளில் மழை நீரால் மூழ்கியுள்ளது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. இதனால் போர்க்காள அடிப்படையில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று காலை மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    2015-ம் ஆண்டு சென்னையை மழை வெள்ளம் மூழ்கடித்தது. அதைவிட தற்போது அதிக மழை பெய்துள்ளது. இன்று காலை முதல் படிப்படியாக மின்சாரம் சீராகும். அனைத்து இடங்களிலும் முறிந்து கிடக்கும் மரங்கள் இன்று மாலைக்குள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 11 சுரங்கப்பாதைகளில் மழை நீரால் மூழ்கியுள்ளது.

    சென்னையில் 8 லட்சம் மக்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3500 மக்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மாநராட்சி தெரிவித்துள்ளது.

    Next Story
    ×