search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைந்த விலையில் சிமெண்டு: வியாபாரியிடம் ரூ.7 லட்சம் பணமோசடி
    X

    குறைந்த விலையில் சிமெண்டு: வியாபாரியிடம் ரூ.7 லட்சம் பணமோசடி

    • மொத்த விற்பனைக்கு பிரபலமாக கம்பெனிகளின் சிமெண்டு மூட்டைகள் இருப்பதாகவும், அதனை தங்களுக்கு குறைந்த விலையில் வருவதாக கூறியுள்ளார்.
    • இதனை நம்பிய சன்பசப்பா அவர் தெரிவித்த வங்கி கணக்கில் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்தை செலுத்தி உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியைச் சேர்ந்தவர் சந்திரப்பா. இவரது மகன் சன்பசப்பா (வயது36). இவர் ஓசூரில் தனியார் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் கட்டிடம் தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்.

    கடந்த 1-ந் தேதி சன்பசப்பாவிற்கு போனில் ஆசிஷ்குமார் என்பவர் தன்னிடம் மொத்த விற்பனைக்கு பிரபலமாக கம்பெனிகளின் சிமெண்டு மூட்டைகள் இருப்பதாகவும், அதனை தங்களுக்கு குறைந்த விலையில் வருவதாகவும், அதற்கு பணத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார்.

    இதனை நம்பிய சன்பசப்பா அவர் தெரிவித்த வங்கி கணக்கில் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். அதன் பிறகு அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. மேலும், மர்ம நபர் ஒருவர் தன்னை மோசடி செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சன்பசப்பா கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×