என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் மாதிரி கிராம திட்டத்தின் தொண்டு நிறுவன பயிற்சி பட்டறை
- வீடுகள் மற்றும் வாழ்வாதாரம் கிடைக்க கடந்த 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறது.
- 50 கள ஒருங்கிணைப ்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் எய்ட் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழகத்தின் பின்தங்கிய மற்றும் பழங்குடி இன மக்களுக்கு கல்வி, சுகாதாரம், குறைந்த விலையில் வீடுகள் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவை கிடைக்க கடந்த 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறது.
தமிழ், கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களில் குழந்தைகளின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதில் தமிழகத்தி லுள்ள பெரும்பான்மை யான பள்ளிகளில் செய ல்பட்டு வருகிறது. மேலும் எய்ட் இந்தியாவின் ஹட்ஸ் டு ஹோம்ஸ் திட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட, மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை கட்டி கொடுத்து வருகிறது. ஏழ்மையான குடும்பங்க ளின் வாழ்க்கையை மேம்ப டுத்து வதற்கான தொலை நோக்கு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை விவாதி க்கவும், மாதிரி கிராம திட்டத்தினை நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கவும் ஜூன் மாதம் 25, 26 ஆகிய நாட்களில் கோத்தகிரியில் 50 கள ஒருங்கிணைப ்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
எய்ட் இந்தியாவின் தொண்டு நிறுவன இணை செயலாளர் தாமோதரன் கூறுகையில், இந்த பட்டறை யில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் பழங்குடியின கிராமங்களில் உள்ள முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாக கொண்ட மாதிரி கிராம திட்டத்தை தொடங்குகின்றோம். தமிழ்நாட்டின் பல கிராமங்களில் ஏழ்மையான குடும்பங்களுக்கு 550 வீடுகளை கட்டி கொடுத்து ள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார திட்டங்கள், ஆரோகியத்திற்காக வீட்டு தோட்டம் அமைப்பது போன்ற நல்ல திட்டங்களை பல கிராமங்களுக்கு விரிவு ப்படுத்த திட்டமிட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
எய்ட் இந்தியா அமைப்பின் செயலாளர் பாலாஜி சம்பத் கூறுகையில், 26 ஆண்டுகளுக்கும் மேலாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தி ற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த மாதிரி கிராம திட்டத்தின் மூலம், மிகவும் பின்தங்கிய குடு ம்பங்களை மேம்படுத்தவும், இந்த கிராமங்களில் உள்ள ஏழை மக்கள் மற்றும் குழந்தை களின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என நம்புவதாக கூறினார்.






