என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய   ஆலயத்தில் நூற்றாண்டு தொடக்க விழா
    X

    மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயத்தில் நூற்றாண்டு தொடக்க விழா

    • புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயத்தில் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.
    • மத்திகிரியில் நூற்றாண்டு விழா காணும் பாரம்பரிய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு நினைவு சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே மத்திகிரியில் 1924-ஆம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயத்தில் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவிற்கு, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கி, ஆடம்பர திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரையுடன் விழாவை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி மறைமாவட்டத்தில் உள்ள மத்திகிரி குதிரைப்பாளையத்தில் 1924-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள புனித ஆரோக்கிய அன்னை பாரம்பரிய ஆலயம் நூற்றாண்டுகளை கடந்தும், இப்பகுதி மக்களிடையே சிறப்புமிக்க வரலாற்று நினைவு சின்னமாக திகழ்கிறது.

    பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ள மத்திகிரி குதிரைப்பளையத்தில் உள்ள பாரம்பரிய ஆலயத்தின் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கி, சிறப்பு ஆடம்பர திருப்பலி மற்றும் சிறப்பு மறையுரை நிகழ்த்தி,விழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அவர் பேசும் போது, மத்திகிரியில் நூற்றாண்டு விழா காணும் பாரம்பரிய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு நினைவு சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

    மேலும் இந்த விழாவில், மத்திகிரி ஆலய பங்கு தந்தை கிறிஸ்டோபர், தர்மபுரி மறை மாவட்ட ஓசூர் வட்டார தலைமை குரு பெரியநாயகம், அருட்தந்தை ராயப்பர், அருட்சகோதரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பங்கு மக்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×