search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளுதியூர் வாரசந்தையில்  ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
    X

    புளுதியூர் வாரசந்தையில் ரூ.40 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

    • மாடு, நாட்டுக்கோழி ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • ஆடுகள் ரூ. 5,200 முதல் ரூ.9,700 வரையும் விற்பனை ஆனது.

    அரூர்,

    அரூர் அடுத்த கோபிநா தம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால் நடைகளை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடு ரூ. 8,000 முதல் ரூ. 42,500 வரையும். ஆடுகள் ரூ. 5,200 முதல் ரூ.9,700 வரையும் விற்பனை ஆனது. நேற்றைய சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு கால்ந டைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவி த்தனர்.

    Next Story
    ×