என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடைகளை ஒப்படைக்கும் போராட்டம்
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிப்காட் எதிர்ப்பு
- ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை களை வளர்க்க முடியாது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம் வளையப்பட்டி, அரூர், லத்துவாடி உள்ளிட்ட கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் நிலம் கையகப்படுத்துவதற்காக சர்வே செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தால், விவசாய நிலஙகள் பாதிக்கப்படுவ துடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். எனவே இப்பகுதி யில் சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கக் கூடாது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தால், விவசாயம் பாதிக்கப்படுவதுடன், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை களை வளர்க்க முடியாது. உள்ளூரிலேயே அனைவரும் அனாதைகள் ஆவோம் என்று கூறி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், வளையப்பட்டி வருவாய் அலுவலரிடம், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் வளையப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






