என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் மீது வழக்கு
    X

    கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் மீது வழக்கு

    10 ஆயிரம் பணத்திற்கு 4 வருடங்களுக்கு அசலும் வட்டியுமாக 7,50,000 கொடுக்குமாறும் பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டு அதற்கு மாதம் வட்டி கேட்டு மிரட்டி உள்ளார். வேப்பனப்பள்ளி போலீசார் கன்னியப்பன் மீது கந்துவட்டி வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பெரியசூளாமலை கிராமத்தை சேர்ந்தவர் ராதா (வயது56). இவர் கனகமுட்லு கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் (42) என்பவரிடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது பேரன் படிப்பிற்காக தனது 30 சென்ட் நிலத்தை கன்னியப்பனிடம் கொடுத்து ரூ.10,500 பெற்றதாக கூறப்படுகிறது.

    பின்னர் ராதா தனது சொத்தை மீட்க முடியாமல் அவருக்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்தார்.

    இதையடுத்து கன்னியப்பன் 4 வருடங்களு க்கு அசலும் வட்டியுமாக 7,50,000 கொடுக்குமாறும் பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டு அதற்கு மாதம் வட்டி கேட்டு மிரட்டி உள்ளார்.

    இதையடுத்து ராதா வேப்பனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கன்னியப்பன் மீது கந்துவட்டி வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×