search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைரோடு அருகே தி.மு.க. பெண் கவுன்சிலரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
    X

    கோப்பு படம்.

    கொடைரோடு அருகே தி.மு.க. பெண் கவுன்சிலரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

    • அந்த தெருவைச் சேர்ந்த பேர் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுங்கள் அதன்பிறகு சாலை போடுங்கள் என கூறி வாக்குவாதம் செய்தனர்.
    • பின்னர் தகாத வார்த்தையால் திட்டி, தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்

    கொடைரோடு:

    கொடைரோடு அடுத்த பொம்மணம்ப ட்டியைச் சேர்ந்த முனியப்பன் மனைவி சத்யா (வயது 40). இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். பொம்மணம்பட்டியில் உள்ள ஒரு தெருவில் சாலை அமைக்க சர்வே பணிகள் நடைபெற்றது. அங்கு கவுன்சிலர் சத்யா பார்வையிட்ட சென்றார்.

    அப்போது சத்யாவிடம் அந்த தெருவைச் சேர்ந்த சரவணன், பாண்டிராஜ், பாண்டிராஜ் மனைவி சண்முகவடிவு ஆகியோர் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுங்கள் அதன்பிறகு சாலை போடுங்கள் என கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் தகாத வார்த்தையால் திட்டி, தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த சத்யா நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவர் அம்மையநாயக்கனூரில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×