search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் சென்டர் மீடியனில் மோதி விபத்து  அய்யப்ப பக்தர்கள் 4 பேர் படுகாயம்
    X

    கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதை படத்தில் காணலாம்.

    கார் சென்டர் மீடியனில் மோதி விபத்து அய்யப்ப பக்தர்கள் 4 பேர் படுகாயம்

    • சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் முதலைப்பட்டி பைபாசில் சென்று கொண்டிருந்தது.
    • அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் தாறுமாறாக ஓடியது.

    நாமக்கல்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு நேற்று இரவு ஒரு காரில் அய்யப்ப பக்தர்கள் 4 பேர் புறப்பட்டனர்.

    விபத்து

    அந்த கார் இன்று அதிகாலை சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் முதலைப்பட்டி பைபாசில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சென்டர் மீடியனில் கார் அதிவேகமாக மோதியது.

    இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. காருக்குள் இருந்த 4 பேருக்கும் அடிபட்டு ரத்த காயங்களுடன் கதறினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், நாமக்கல் நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அவர்களை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், டிரைவர் தூங்கியதால் கார் தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×