என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே முகாமிட்டிருந்த 3 யானைகள் விரட்டப்பட்டன
- 3 யானைகள், கிருஷ்ணகிரி அருகே சோக்காடி பகுதியில் முகாமிட்டிருந்தன.
- வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வனப்பகுதியில் இருந்து வந்த 3 யானைகள், கிருஷ்ணகிரி அருகே சோக்காடி பகுதியில் முகாமிட்டிருந்தன. அந்த யானைகளை கடந்த 9-ந் தேதி வெங்கிலிகானப்பள்ளி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்ட முயன்றனர்.ஆனால் விரட்ட முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துடுகனஅள்ளி வழியாக ஆலப்பட்டி மலைப்பகுதிக்கு யானைகளை விரட்டினார்கள்.
3 யானைகளும் நேற்று காலை ஆலப்பட்டி மலைப்பகுதியில் இருந்து இறங்கி சொக்கம்பட்டி காப்பு காட்டில் தஞ்சம் அடைந்தன. அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Next Story






