என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடையை மீறும் வாகனங்களால்பலவீனமடையும் கும்பக்குழி பாலம்
- மாயனூர் காவிரி ஆற்றின் கரையில்பலவீனமடையும் கும்பக்குழி பாலம்
- பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
மாயனூர் காவிரி ஆற்றின் கரையில், அமராவதி பாசன வா ய்க்கால் கடைமடை தண்ணீர் வடிந்து செல்லும் வடிகா லாக, கும்பக்குழி பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக, மாயனூரில் இருந்து கட் டளை, ரெங்கநா தபுரம் ஆகிய பகுதிக்கு மக்கள் சென்று வருகி ன்றனர். கடந்தாண்டு பெய்த மழையால், பாலத்தின் தடுப்பு சுவர் உடைந்தது. அப் போது, நீர்வளத்துறை சார்பில் தற்காலிகமாக மணல் மூட்டைகள், குச்சிகள் வைத்து சரி செய்ய ப்பட்டது. பின், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. டூவீலரில் மக்கள் செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெரிய வாகனங் களும் தடையை மீறி சென்று வருகின்றன. இதனால், பாலம் பலவீனமடையும் நிலை உள்ளது. எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள், அறிவிப்பு பலகை வைத்து, எச்சரிக்கை விடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






