என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்விரோதத்தால்   விவசாயியை தாக்கிய   உறவினர் கைது
    X

    முன்விரோதத்தால் விவசாயியை தாக்கிய உறவினர் கைது

    • இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    • கோவிந்தராஜிடம் தகராறு செய்த சண்முகம் அவரை காயப்படுத்தியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே யுள்ள கோட்டப்பள்ளி பழையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 56).

    விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் கோவிந்தராஜின் உறவினரான சண்முகம் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இதன் காரணமாக கோவிந்தராஜிடம் தகராறு செய்த சண்முகம் அவரை காயப்படுத்தியுள்ளார்.

    இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கோவிந்தராஜ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து கோவிந்தராஜ் தந்த புகாரின் பேரில் மகாராஜாக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×