என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

எருது விடும் விழாவில் வன்முறை: கிருஷ்ணகிரி எஸ்.பி. பேட்டி

- லத்தியாலும், காலாலும் தாக்கியதாக ஒரு வீடியோ பரவி வருகிறது.
- போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோபச்சந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவின் போது ஏற்பட்ட வன்முறையில், நான் ஒருவரை லத்தியாலும், காலாலும் தாக்கியதாக ஒரு வீடியோ பரவி வருகிறது.
எருது விடும் விழாவின் போது ஏற்பட்ட வன்முறையில், அங்கிருந்த பெண்கள் மற்றும் பெண் போலீசாரிடம் சிலர் அத்துமீறி நடக்க முயன்றனர். மேலும் அவர்கள் மீது கற்களை வீசியும், ஆபாசமான வார்த்தைகளாலும் பேசினர். இதனால் அவர்களை பிடித்து அமர வைத்தோம். அப்போது நடந்த நிகழ்வை தான், போலீஸ் சூப்பிரண்டு லத்தியால் அடிக்கிறார். பூட்ஸ் கால்களால் மிதிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் சிலர் தவறாக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
உண்மையிலேயே அங்கு என்ன நடந்தது என்று அங்கிருந்த போலீசார், உள்ளூர் மக்கள் அறிவார்கள். ஓசூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் அரசின் கவனக்குறைவோ, மாவட்ட நிர்வாக குளறுபடியோ இல்லை. விழா நடத்துபவர்கள், உரிய சான்றிதழை அளிக்க தாமதமானதால் இளைஞர்கள் பிரச்சினையில் ஈடுபட்டனர். உள்ளூர் பொதுமக்கள் யாரும் பிரச்சினையில் ஈடுபடவில்லை.
பொதுவாக எருதுவிடும் விழாவில் உள்ளூர் மாடுகளை கொண்டே நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் விதிகளுக்கு மாறாக அண்டை மாநில வாலிபர்கள், தங்கள் மாடுகளுடன் வந்தனர். அவர்கள் எருது விடும் விழா நடத்த தாமதமானதாக கூறி சாலையில் மறியல் செய்தும், தாக்கியும் உள்ளனர்.
உள்ளூரை சேர்ந்த பெண்களிடமும், பெண் போலீசாரிடமும் அத்துமீறி நடக்க முயன்றது பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான். வன்முறைக்கு காரணமானவர்கள் யார் என்று புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். ஒருவரும் தப்ப முடியாது. அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
சாலை மறியலின் போது முதலில் லாரியை கொண்டு வந்து சாலையின் குறுக்கே நிறுத்தியது யார்? என்றும், சாலையில் கற்களை போட்டது யார்? என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் போலீசார் தாக்கப்பட்டுள்ளனர். அரசு உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் பொதுமக்கள் யாரும் காயம் அடையவில்லை.
இனி வரும் காலங்களில் எருது விடும் விழா நடத்துபவர்கள் விழாவிற்கு முந்தைய நாளே தகுதியுள்ள அனைத்து சான்றிதழ்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் எருது விடும் விழாவிற்கு வெளிமாநிலத்தில் இருந்து இனி மாடுகளுடன் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி வெளிமாவட்ட மக்கள் தங்களின் மாடுகளுடன் இங்கு வரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
