கல்லால் தாக்கி கட்டிட மேஸ்திரி கொலை- வாலிபர் கைது

நீலகண்டன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பூவரசன் ஆகியோர் மது குடிக்க சென்றனர்.ஆத்திரம் அடைந்த பூவரசன் நீலகண்டனின் தலையில் கல்லை போட்டு தாக்கி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
கல்லால் தாக்கி கட்டிட மேஸ்திரி கொலை- வாலிபர் கைது
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த பரனூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 46). கட்டிட மேஸ்திரியான இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பும் போது பரனூர் சுடுகாடு செல்லும் வழியில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.

இதுகுறித்து தவகல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்ந்தபோது நீலகண்டன் இறந்தது தெரிய வந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நீலகண்டன் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நீலகண்டன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பூவரசன் (24) ஆகியோர் மது குடிக்க சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பூவரசன் நீலகண்டனின் தலையில் கல்லை போட்டு தாக்கி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து பூவரசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com