என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்லால் தாக்கி கட்டிட மேஸ்திரி கொலை- வாலிபர் கைது
- நீலகண்டன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பூவரசன் ஆகியோர் மது குடிக்க சென்றனர்.
- ஆத்திரம் அடைந்த பூவரசன் நீலகண்டனின் தலையில் கல்லை போட்டு தாக்கி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த பரனூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 46). கட்டிட மேஸ்திரியான இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பும் போது பரனூர் சுடுகாடு செல்லும் வழியில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து தவகல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்ந்தபோது நீலகண்டன் இறந்தது தெரிய வந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நீலகண்டன் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நீலகண்டன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பூவரசன் (24) ஆகியோர் மது குடிக்க சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பூவரசன் நீலகண்டனின் தலையில் கல்லை போட்டு தாக்கி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பூவரசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்