என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் அருகே ரூ.10 கோடியில் கட்டப்பட்ட கிட்டங்கி பயன்பாடற்ற நிலை
    X

    பூண்டியில் கட்டப்பட்டுள்ள கிட்டங்கி.

    கொடைக்கானல் அருகே ரூ.10 கோடியில் கட்டப்பட்ட கிட்டங்கி பயன்பாடற்ற நிலை

    • கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 கோடி செலவில் பூண்டி கிராமத்தில் கிட்டங்கி பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.
    • தற்போது கட்டி முடிக்கப்பட்டு காட்சி பொருளாகவே இந்த கிட்டங்கி உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பூண்டு பயிருக்கு புவிசார் குறியீடு கிடைத்து உலகப்புகழ்பெற்று விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலைப்பூண்டு பயிரை அறுவடை செய்தபின்னர், புகைப்போட்டு, அதனை பாதுகாக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 கோடி செலவில் பூண்டி கிராமத்தில் கிட்டங்கி பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.

    ஆனால் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்தும், அது இன்றளவும் பயன்படாமல் கிடப்பில் உள்ளது. மேல்மலை விவசாயிகள், தாங்கள் விளைவித்த மலைப்பூண்டு பயிரை, கண்ணும் கருத்துமாக கண்காணித்து, தங்கள் வீடுகளிலேயே அதனை புகைபோட்டு, சந்தைக்கு அனுப்புவது, பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

    எனவே இந்த கிட்டங்கி அமைக்கும்போதே விவசாயிகளுக்கு பயன்அளிக்காது என்று பெரும்பாலோனார் தெரிவித்தனர். ஆனால் தற்போது கட்டி முடிக்கப்பட்டு காட்சி பொருளாகவே இந்த கிட்டங்கி உள்ளது. எனவே இதனை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றுவழியில் யோசித்து உபயோகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×