search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்
    X

    இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண்

    • திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பொதுமக்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    • காலை திடீரென மணப்பெண் மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாழைக்கரையை சேர்ந்த 24 வயதான பட்டதாரி இளம்பெண்ணு க்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இன்று திருமணம் நடைபெற இருந்தது.அதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்திருந்தனர்.

    உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்ததுடன், தாராபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு வழங்க அறுசுவை உணவுகள் தயார் செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை திடீரென மணப்பெண் மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த இரு வீட்டாரது உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே இது குறித்து தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் மாயமான மணப்பெண் தாராபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.இதனால் திருமணம் பிடிக்காமல் அந்த வாலிபருடன் மணப்பெண் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி இளம்பெண்ணை தேடி வருகின்றனர். இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்றிரவு முதல் திருமண மண்டபம் களை கட்டியிருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் இன்று களை இழந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பொதுமக்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    Next Story
    ×