search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநாங்கூர், வண்புருஷோத்தம பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
    X

    ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    திருநாங்கூர், வண்புருஷோத்தம பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

    • கொடிமரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் எழுந்தருளினார்.
    • பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்து முறை செய்விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் 108 திவ்யதேசங்களில் 11 திவ்ய தேச பெருமாள் கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன. இதில் பிரசித்தி பெற்ற வண்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடிமரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் எழுந்த ருளினார். பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்து முறை செய்விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு திரு மஞ்சனம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவ கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தின் முதல் நாள் பெருமாள் சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்து அருளி வீதி உலா நடைபெற்றது.

    Next Story
    ×