என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்க முயன்ற சிறுவன் கைது
    X

    பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்க முயன்ற சிறுவன் கைது

    • சின்னம்பேடு ஊராட்சி, அய்யனார் மேடு பஸ் நிறுத்தம் அருகே சிறுவன் கைது செய்யப்பட்டான்
    • சுமார் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயற்சி

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் நேற்று மாலை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். சின்னம்பேடு ஊராட்சி, அய்யனார் மேடு பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது அவன் சுமார் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய நின்று கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டான். எனவே, போலீசார் அந்த சிறுவனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×