என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மங்களூரில் குண்டு வெடிப்பு சம்பவம் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
- கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
குள்ளனம்பட்டி:
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக எல்லைப்பகுதியிலும் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ரெயில்நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் ரெயில்வே நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன் உத்தரவின்படி, ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் அனைத்து ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் இருக்கைகள் மற்றும் உடைமைகள், நடைமேடை, கார் பார்க்கிங், பார்சல், ஆட்டோ ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்