search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வு முடிவு: விழுப்புரம் உண்டு உறைவிட பள்ளியில் படித்த மாணவி முதலிடம்
    X

    நீட் தேர்வு முடிவு: விழுப்புரம் உண்டு உறைவிட பள்ளியில் படித்த மாணவி முதலிடம்

    • கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பிளஸ் 2 படித்து முடித்தார்.
    • அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தேவநாத சுவாமி நகர், ஜி .ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை படித்தார். பின்பு அங்கு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பிளஸ் 2 படித்து முடித்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் படத்தில் 99 மதிப்பெண்கள், ஆங்கிலம் 94 மதிப்பெண்கள், கணிதம் இயற்பியல் வேதியல் மற்றும் உயிரியியல் ஆகிய நான்கு பாடத்திலும் தலா 100 மதிப்பெண்கள் என 593 மதிப்பெண்கள் பெற்றார்.

    இந்த ஆண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில், அரசு பள்ளி அளவில் பிருந்தா கட்ஆப் 200க்கு 200 எடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வில் 467 மார்க் எடுத்து இவர் அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த மாணவிக்கு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×