search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் ரத்ததான முகாம்
    X

    முகாமில் கலந்து கொண்டவர்கள்.

    திண்டுக்கல்லில் ரத்ததான முகாம்

    • திண்டுக்கல்லில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் பேகம்பூர் அடுத்துள்ள பூச்சிநாயக்கம்பட்டி மாநகராட்சி பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் பேகம்பூர் அடுத்துள்ள பூச்சிநாயக்கம்பட்டி மாநகராட்சி பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஷேக் பரீத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நைனா முகமது, செயலாளர் நியாஜ்தீன், பொருளாளர் நத்தம் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளர் ஜமால் முகமது ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

    முகாமில் அரசு ரத்த வங்கி டாக்டர் புவனா, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில ஊடகப் பிரிவு செயலாளர் அப்துல் ஹாலிக், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முகமது யாசின், மாநகர பொருளாளர் சேக் முகமது, வைகறை தொழிற்சங்க செயலாளர் பாபுஜி, காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், தி.மு.க. மேற்கு மண்டல செயலாளர் பஜ்லூல் ஹக், கவுன்சிலர் ஹசீனா காஜா மைதீன், சமூக ஆர்வலர் சித்தாரா அன்சாரி, மாநகர தலைவர் சாதிக்கலி, ஊடக பிரிவு பொருளாளர் சஹின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×