என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிபட்டணத்தில் சாலையை மறித்துவைத்த சினிமா பேனர்கள் அகற்றம்
    X

    பேனர்கள் அகற்றப்பட்டதை படத்தில் காணலாம்.

    காவேரிபட்டணத்தில் சாலையை மறித்துவைத்த சினிமா பேனர்கள் அகற்றம்

    • சாலையை மறித்து சினிமா பேனர்களை வைத்துள்ளனர்.
    • மாலை மலையில் செய்தி எதிரொலியாக ரோட்டை மறித்து வைத்திருந்த பேனர்கள் உடனடியாக அகற்றிவிட்டனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பஸ் நிலைய மேம்பாலம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில், சாலையை மறித்து சினிமா பேனர்களை வைத்துள்ளனர். இதனால் அவ்வழியே செல்பவர்கள் போஸ்டரை பார்த்து செல்லும் சமயத்தில் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என நேற்று மாலை மலர் செய்தி வெளியிட்டு இருந்தது. இதனை அடுத்து உடனடியாக அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் பொழுது தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கடைக்காரர்கள் , சினிமா தியேட்டர் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், அதில் சாலையை மறித்து சினிமா பேனர்கள் வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் என்ன நேற்று தெரிவித்திருந்தோம் . இதனை அடுத்து நேற்று மாலை மலையில் செய்தி எதிரொலியாக ரோட்டை மறித்து வைத்திருந்த பேனர்கள் உடனடியாக அகற்றிவிட்டனர். ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×