search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீகார் மாநில தொழிலாளி தற்கொலை
    X

    பீகார் மாநில தொழிலாளி தற்கொலை

    • தம்பியான மோனுகுமார் (வயது 19) என்பவரை தன்னுடன் அழைத்து வந்து ஓசூரில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.
    • தங்கியுள்ள அறையிலேயே தூக்கு போட்டு மோனுகுமார் தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ். இவரது மகன் துளசிதாஸ் குமார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொத்தகொண்ட பள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற துளசிதாஸ்குமார் தனது தம்பியான மோனுகுமார் (வயது 19) என்பவரை தன்னுடன் அழைத்து வந்து ஓசூரில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.

    ஆனால் சொந்த ஊரை விட்டு வர மனம் இல்லாத மோனுகுமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தாங்கள் தங்கியுள்ள அறையிலேயே தூக்கு போட்டு மோனுகுமார் தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து துளசிதாஸ் குமார் கொடுத்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×