என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்வாய் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
    X

    கால்வாய் கட்டுமான பணிக்கு பூமி பூஜை

    • கே.கே.நகரில் கழிவு நீர் கால்வாய் இல்லாமல் அவதிபட்டு வந்தனர்.
    • 50 ஆயிரம் மதிப்பில் சாலையின் இருபுறமும் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட கே.கே.நகரில் கழிவு நீர் கால்வாய் இல்லாமல் அவதிபட்டு வந்தனர். இதை அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

    அதன் பேரில் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலையின் இருபுறமும் கால்வாய் அமைக்கு பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சூளகிரி துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் டென்சிங், கனகராசு, தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்வி ராமன், துணைத் தலைவர் வரலட்சுமி, செயலர் வெங்கடேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் சீனிவாசன், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×