என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.13.50 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை
- ரூ.13.50 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
- தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம். வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொப்பகரை ஊராட்சி ஆர்.குட்டூர் கிராமத்திற்க்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.50 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
இதில் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணகிரி அசோக்குமார், ஊத்தங்கரை தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன், அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் முருகன், முன்னால் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம், கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி, முன்னால் தலைவர் புருசப்பன், கூட்டுறவு சங்க இயக்குனர் சபரிசீனிவாசன், அவைத்தலைவர் மாரிமுத்து, ஒன்றிய பொருளாளர் மகேஷ்குமார், துணை செயலாளர் முனுசாமி, சாந்தகுமார், ராஜா உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.






