என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.10 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை
- ரூ.10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குந்தாரப்பள்ளி அடுத்த திப்பனப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி, நிர்வாகிகள் நாராயணபெருமாள், தாபா வெங்கட்ராமன், ரமேஷ், மகேந்திரன், சக்திசீலன், தீர்த்தகிரி, ராமலிங்கம், வேடியப்பன், ஐடி விங் மாவட்ட பொறுப்பாளர் சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






