search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே  நகர்ப்புற நல்வாழ்வு மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை
    X

    பல்லடம் அருகே நகர்ப்புற நல்வாழ்வு மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை

    • விழாவிற்கு பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் தலைமை தாங்கினார்.
    • அரசு அலுவலர்கள் ,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற நல்வாழ்வு மைய கட்டடம் பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம் நகராட்சி நாரணாபுரம் பகுதியில், தேசிய சுகாதார இயக்கம் 15வது மத்திய நிதி ஆணையம் (2022-2023) திட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் தலைமை தாங்கினார்.

    நகராட்சி தலைவர் கவிதாமணி திட்டப்பணியை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி.நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு,நகர்மன்ற உறுப்பினர் தினேஷ்குமார்,நகர திமுக. செயலாளர் ராஜேந்திரகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் ,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×